வழக்கை வாபஸ் வாங்கு: சிறையிலிருந்து வாட்ஸ்அப்பில் தொழிலதிபரை மிரட்டிய ரவுடி!

ரவுடி சீசிங் ராஜா
ரவுடி சீசிங் ராஜாவழக்கை வாபஸ் வாங்கு: சிறையிலிருந்து வாட்ஸ்அப்பில் தொழிலதிபரை மிரட்டிய ரவுடி!

சிறையில் தொலைப்பேசி பயன்படுத்தத் தடை இருக்கும் போது வாட்ஸ்அப் மூலம் தொழிலதிபருக்கு கைதி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரை ஏற்கெனவே 'ஏ பிளஸ்' சரித்திர பதிவேடு ரவுடியான சீசிங் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்துக் கடத்திப் பணம் பறித்துள்ளார். இது தொடர்பாகப் புகாரளித்துக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.

பின்னர் வேளச்சேரியில் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைதுச் செய்யப்பட்டு 05-11-2022 முதல் பூந்தமல்லி கிளைச் சிறைச்சாலையில் இருந்து வருகிறார். இந்தநிலையில் சிறையில் இருந்து கொண்டே வாட்ஸ்அப் கால் மூலம் 2020-ல் போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறச் சொல்லி ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகச் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சிட்லப்பாக்கம் போலீஸார் 294(b), 506(1), ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறைச்சாலையில், தொலைப்பேசி பயன்படுத்தத் தடை இருக்கும்போது எவ்வாறு கைதி ஒருவர் வாட்ஸ்அப் கால் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in