பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை மீது தாக்குதல்: ராணுவவீரரைத் தேடும் போலீஸ்

ஆசிரியை தாக்கிய ராணுவவீரர்
ஆசிரியை தாக்கிய ராணுவவீரர்பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை மீது தாக்குதல்: ராணுவவீரரைத் தேடும் போலீஸ்

பள்ளி ஆசிரியை மீது, பள்ளி வளாகத்திற்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு, பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த மெர்லின்(48) ஆசிரியையாக உள்ளார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ராணுவ வீரரான அந்தோணிதாசும், ஆசிரியையாக இருக்கும் ஆனந்த மெர்லினும் அடிக்கடி சந்தித்துப் பேசித் தங்கள் நட்பை வளர்த்தனர்.

இந்நிலையில் அண்மையில் விடுமுறையில் ஊருக்கு வந்தார் ராணுவ வீரர் அந்தோணிதாஸ். அவர் பெருமாள்புரம் காவல்நிலையத்தில், “ஆனந்த மெர்லின் தன்னிடம் நட்பாகப் பழகி இதுவரை 20 லட்சம் கடன் பெற்றதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை எனவும் புகார் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் கருங்குளத்தில் ஆசிரியை ஆனந்த மெர்லின் பணிசெய்யும் பள்ளிக் கூடத்திற்கு நேற்று மாலை சென்று ஆனந்த மெர்லினை, அந்தோணிதாஸ் தாக்கினார். தான் ஏற்கெனவே வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும், ஆனால் அந்தோணிதாஸ் மீண்டும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாகவும், தன்னைத் தாக்கியதாகவும் ஆனந்த மெர்லின் புகார் கொடுத்தார்.

இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்ட பெருமாள்புரம் போலீஸார், ராணுவ வீரர் அந்தோணிதாஸ் மீது இன்று வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்யத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in