ஐ.டி பொறியாளர்களான இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த கார் டிரைவர்: வைரல் வீடியோவால் பாய்ந்தது வழக்கு

ஐ.டி பொறியாளர்களான இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த கார் டிரைவர்: வைரல் வீடியோவால் பாய்ந்தது வழக்கு

மகாராஷ்டிராவில் ஐ.டி பொறியாளர்களான இரட்டைச் சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த கார் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி(36). இரட்டைச் சகோதரிகளான இவர்கள் தாயுடன் வசித்து வந்தனர். இவர்களது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மென்பொறியாளரான சகோதரிகள் இருவருக்கும் அதுல் அவ்தாடே என்ற கார் ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. இரண்டு சகோதரிகளும் அதுலை திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இவர்களது திருமணம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மல்ஷிராஸ் தாலுகாவில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. ஒரே மேடையில் இரண்டு சகோதரிகளையும் அதுல் திருமணம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து அக்லுஜ் காவல் நிலையத்தில் மணமகன் அதுல் மீது பிரிவு 494 (மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே கூறுகையில், “இரட்டைச் சகோதரிகளை ஒன்றாக திருமணம் செய்ததற்காக அதுல் அவ்தாடே மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in