இந்தியாவில் கரோனாவுக்கு ஒரேநாளில் 871 பேர் உயிரிழப்பு!

24 மணி நேரத்தில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைHindu கோப்பு படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.35 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், கரோனாவுக்கு ஒரேநாளில் 871 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா 3-வது அலை பரவியுள்ள நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் மக்களை அதிக அளவு பாதிக்காவிடாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் உயர்ந்த தினசரி பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் 2,86,384 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 35 ஆயிரம் குறைந்து 2,51,209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில், 2-வது நாளாக கரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரேநாளில் 871 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து நேற்று மட்டும் 3,35,939 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,04,333 ஆக உள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 13.39 சதவீதமாக உள்ளது. தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.04 கோடியாக உயர்ந்துள்ளது. 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 74 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in