திருச்சி விமான நிலையத்தில் 74,19,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: சட்டவிரோத செயல்களுக்காக கொண்டு வரப்பட்டதா?

திருச்சி விமான நிலையத்தில் 74,19,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: சட்டவிரோத செயல்களுக்காக கொண்டு வரப்பட்டதா?

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள 74 லட்சத்து 19 ஆயிரம் வெளிநாட்டு பணம் இந்தியாவில்  சட்டவிரோத செயல்களுக்காக கொண்டு வரப்பட்டதா என அதிகாரிகள்  விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். அண்மைக்காலமாக திருச்சி விமான நிலைய வழியாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சுங்கத்துறை வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுக்கரன்சிகள் அதிகம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சிங்கப்பூரிலிருந்து  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டார். அதனையடுத்து அவரை சோதித்தபோது  அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 74,19,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் (வெளிநாட்டு கரன்சி) கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்த ஆண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் கடத்திவரப்பட்ட பணம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த கடத்திவரப்பட்டதா ? என்பது குறித்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in