கரோனாவால் ஒரே நாளில் 703 பேர் உயிரிழப்பு; 3.47 லட்சம் பேர் பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையி்ல், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 82 ஆயிரத்து 970-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 160 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரத்து 484 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in