பட்டியலில் தேர்வான 700 ஆயுள் தண்டனை கைதிகள்: மத்தியச் சிறைகளிலிருந்து 75 பேர் விடுதலை!

பட்டியலில் தேர்வான 700 ஆயுள் தண்டனை கைதிகள்: மத்தியச் சிறைகளிலிருந்து 75 பேர் விடுதலை!

அண்ணா  பிறந்த நாளையொட்டி தமிழக சிறைகளில் தண்டனை பெற்று வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள், அரசிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள  மத்தியச் சிறைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதல் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  புழல் மத்தியச் சிறை 13, வேலூர் மத்தியச் சிறை 2 , கடலூர் மத்தியச் சிறை 5,சேலம் மத்தியச் சிறை 1, கோவை மத்தியச் சிறை 12, திருச்சி மத்தியச் சிறை 12, மதுரை மத்தியச் சிறை 22, திருச்சி பெண் சிறை 2, புழல் பெண் சிறை 2, புதுக்கோட்டை சிறை 4 என மொத்தம் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகியுள்ளனர் . அடுத்தடுத்த தினங்களில் மற்ற கைதிகளும் விடுதலையாக உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in