சிறையில் இருந்து வந்த மறுநாளே நர்ஸ் வீட்டில் 70 சவரன் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி!

நகைகள் திருடியவர் கைது
நகைகள் திருடியவர் கைதுசிறையில் இருந்து வந்த மறுநாளே நர்ஸ் வீட்டில் 70 சவரன் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி!

திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே நர்ஸ் வீட்டில் 70 சவரன் நகையைத் திருடி காதலியுடன் ஜாலியாக இருந்த திருடனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருபவர் முருகதாய். அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10-ம் தேதி சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 70 சவரன் நகை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில், குற்றச்செயலில் ஈடுபட்டது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரைத் தேடிய போது திருடிய நகைகளை சவுகார்பேட்டையில் விற்பனை செய்ய முயன்ற போது போலீஸார் கைது செய்தனர்

கைதான பாலமுருகன் மீது சென்னை, அம்பத்தூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்ஸ் வீட்டில் பாலமுருகன் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் அம்பலமானது.

கொள்ளையடித்த நகைகளை விற்று ஊத்துக்கோட்டையில் உள்ள தனது கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 57 சவரன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in