14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிவச்சந்திரன்
சிவச்சந்திரன்14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அப்பகுதியைச் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். திண்டுக்கல் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 

அப்போது, திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவச்சந்திரன் (43) என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கு வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான சிவச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in