சட்டைக்குள் 68 லட்சம் ஹவாலா பணம்; இரவில் சென்னை வந்த ஆந்திர வாலிபர்கள்: ரயில்வே போலீஸ் அதிரடி

ஹவாலா பணத்துடன் சிக்கிய வாலிபர்கள்
ஹவாலா பணத்துடன் சிக்கிய வாலிபர்கள் சட்டைக்குள் 68 லட்சம் ஹவாலா பணம்; இரவில் சென்னை வந்த ஆந்திர வாலிபர்கள்: ரயில்வே போலீஸ் அதிரடி

ஆந்திராவில் இருந்து ரயிலில் சட்டை பையில் மறைத்துக்கொண்டு வந்த 68 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு லோக்மானிய திலக் விரைவு ரயில் வந்தது. அப்போது ரயில் பொதுப்பெட்டியில் இருந்து இறங்கி வந்த இரு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பெரம்பூர் ரயில்வே போலீஸார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் அணிந்திருந்த சட்டை உள்ள பக்கத்தில் கத்தை கத்தையாக ஹவாலா பணம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுனில்குமார்(39), அப்துல்ரஹமான் (22) என்பது தெரியவந்தது.

மேலும் சுனில் தான் அணிந்திருந்த சட்டைக்குள் 35 லட்ச ரூபாயும், அப்துல் 33 லட்ச ரூபாயும் மறைத்து கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து 68 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸார் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ஹவாலா பணம் 68 லட்சம் மற்றும் பிடிபட்ட சுனில், அப்துல் ஆகிய இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்ட இருவரிடம் ஆந்திராவில் இருந்து ரயிலில் ஹவாலா பணம் கடத்தி்வந்தது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in