சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் கொடியேற்றம்: ஜனவரி 5-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் கொடியேற்றம்: ஜனவரி 5-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி மார்கழித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 5-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர். இந்திரன் புனிதம் அடைந்த ஸ்தலம் இது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாள்கள் மார்கழித் திருவிழா மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.

நிகழாண்டிற்கான மார்கழித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்குமண் மடம் ஸ்தானிகர் கொடி ஏற்றினார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்புப் பூஜைகள் செய்தார். விழா நாள்களில் தினமும் மாலையில் சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் 9-ம் திருவிழாவன்று, 5-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் நடக்கிறது.

சுவாமிதேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் இதில் பவனிவரும். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வழக்கம் போல், வரும் 5-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in