தேர்வு நேரத்தில் விளையாடாதே: தந்தை கண்டித்ததால் 4 -ம் வகுப்பு மாணவி தற்கொலை

தற்கொலை
தற்கொலைதேர்வு நேரத்தில் விளையாடாதே: தந்தை கண்டித்ததால் 4 -ம் வகுப்பு மாணவி தற்கொலை

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியைத் தந்தை கண்டித்தார். இதனால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகள் பிரதிஷா(10), அங்குள்ள தனியார் பள்ளியில் 4 - ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு பிரதிஷா தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். தேர்வு நேரம் என்பதால் வீட்டிற்கு சென்று படிக்குமாறு தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

அத்துடன் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மனைவியுடன் சென்று வாகனத்திற்கு பெட்ரோல் போட கிருஷ்ணமூர்த்தி சென்றார். இதன் பின் வீட்டிற்கு வந்த போது, மகள் பிரதிஷா தூக்கில் தொங்கியிருந்தார்.இதனால் துடிதுடித்து போன பெற்றோர் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிரதிஷாவை பரிசோத்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி பிரதிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in