4 வயது சிறுமியை இழுத்துச் சென்ற புலி: ஊட்டி அருகே பயங்கரம்

4 வயது சிறுமியை இழுத்துச் சென்ற புலி:  ஊட்டி அருகே பயங்கரம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 4 வயது சிறுமியை புலி அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இன்று பிற்பகல் அரக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை வனவிலங்கு தாக்கி இழுத்துச் சென்றதாக வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்த வந்த வனத்துறையினர் படுகாயத்துடன் கிடந்த நிஷாந்த் என்பவரது சரிதா என்ற 4 வயது சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதில் சிறுமியை சிறுத்தை அல்லது புலி தாக்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in