இலவச வேட்டி சேலை வாங்கும்போது கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி: தொழிலதிபர் அதிரடி கைது

கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உயிரிழப்பு
கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உயிரிழப்புதொழிலதிபர் அதிரடி கைது

வாணியம்பாடியில் இலவசமாக வழங்கப்பட்ட வேட்டி சேலைக்காக டோக்கன் வழங்கும்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி நேற்று நான்கு பெண்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த தொழிலதிபர் ஐயப்பன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வாரச்சந்தையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் திடீரென ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தைப்பூசத்தை ஒட்டி அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதற்கான டோக்கனை தொழிலதிபர் ஐயப்பன் என்பவர் கொடுத்து இருக்கிறார். அப்போது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கு மேற்பட்டவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர்.

நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்த ஐயப்பனின் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் மட்டுமே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்தனர். கூட்ட நெரிசலில் அவர்களும் ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வாணியம்பாடி போலீஸார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்த தொழிலதிபர் ஐயப்பனை நேற்று இரவு கைது செய்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு பெண்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அமைச்சர் எ.வ.வேலு தன் சொந்தப்பணத்தில் இருந்து உயிரிழந்தோருக்கு தலா ஒரு லட்சம் வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in