வங்கிகளில் 4 ஆயிரம் கோடி மோசடி: அமலாக்கத்துறையால் சுரானா நிறுவன இயக்குநர்கள் உள்பட 4 பேர் அதிரடியாக கைது

வங்கிகளில் 4 ஆயிரம் கோடி மோசடி: அமலாக்கத்துறையால் சுரானா நிறுவன இயக்குநர்கள் உள்பட 4 பேர் அதிரடியாக கைது

வங்கிகளில் 4000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த சுரானா நிறுவன இயக்குநர்கள் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 1301.76 கோடி ரூபாய், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1495.76 கோடி ரூபாய், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1188.56 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததுடன், வாங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்தாத காரணத்தால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடன் பெற்ற தொகையைச் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் நான்கு பேரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். இவர்களை வருகிற 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in