சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நால்வர் கைது: போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நால்வர் கைது: போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் அந்த மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை, மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்த மறுவாழ்வு மையத்தில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் மனநல பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளான். சில நாட்கள் கழிந்த நிலையில் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்துச் சென்று, தனது வீட்டிற்குச் சென்றான். பின்னர், தனது பெற்றோரிடம் மறுவாழ்வு மையத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குண்டூசியால் மார்பில் குத்துவதாகவும், சிகரெட் நெருப்பால் சூடு வைப்பதாகவும், மன ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஓரினச் சேர்க்கைக்கைக்கு உட்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் கதறி அழுதுள்ளான்.

சிறுவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார்(40), உதவியாளர் கார்த்திக்(29), ஜெகன், மோகன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தகவல் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தெரிந்த நிலையில், சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை வேறு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றிய காவல்துறையினர். அந்த மறுவாழ்வு மையத்தினை பூட்டு போட்டுப் பூட்டினர். போதை மறுவாழ்வு மையத்தின் பொறுப்பாளர் நாவலர் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in