நிலைத் தடுமாறி விழுந்த பெற்றோர்; பறிபோன குழந்தையின் உயிர்: மருத்துவமனைக்கு சென்றபோது பரிதாபம்

நிலைத் தடுமாறி விழுந்த பெற்றோர்; பறிபோன குழந்தையின் உயிர்: மருத்துவமனைக்கு சென்றபோது பரிதாபம்

தூத்துக்குடியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த மூன்றாம் வகுப்பு மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மேல அலங்காரதட்டை பகுதியைச் சேர்ந்தவர் கைசான்முரை(40) வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி மரியசூடுநிஷா(38). இவர்களது மகள் தாரணி முராய்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் சிறுமி தாரணி முராய்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் கடந்த 21-ம் தேதி டூவீலரில் கைசான் முரையும், அவரது மனைவியும் மகள் தாரணி முராயை அழைத்துச் சென்றனர். அப்போது வாகைகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பைக் நிலைகுலைந்து அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் சிறுமி தாரணி முராய் உள்பட மூன்றுபேரும் கீழே விழுந்தனர். அக்கம், பக்கத்தினர் மூவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தாரணி முராய் நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். இச்சம்பவம் அப்பகுதிவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in