
நேபாள் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் 3.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத்தட்டுகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதே போல் நேபாளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல் இந்தியா, கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், நேபாள், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து மிதமானது முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று இரவு 1 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்ற போதும், அடுத்தடுத்து உணரப்படும் நிலநடுக்கங்களால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.