அதிகாலையில் அதிர்ச்சி; மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்ராவில்  நிலநடுக்கம்
மகாராஷ்ராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோல், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஏராளமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பொருட்செலவும் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

இதனிடையே, இந்தியாவின் வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி லேசானது முதல் மிதமானது வரை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் ஹிங்கோலி பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வீடுகளில் இருந்தவர்களுக்கு இந்த நிலநடுக்க உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 5.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் நிலநடுக்கங்களால் வடமாநில மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in