சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: அதிகாலையில் நடந்த சோகம்

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: அதிகாலையில் நடந்த சோகம்

அதிகாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலியாயினர். இருவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்குக் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையையும், மனைவியையும் பார்ப்பதற்காகக் ஏஜாஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் சென்றுள்ளார்.  அப்போது அவருடன் ஏஜாஸின் தாய் சமீம் (50), தங்கை அம்ரின் (22), இவர்களது உறவினர்கள் நசீம் (45), சுபேதா (21), ஆகியோரும் சேலம் சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சேலத்திலிருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீம், அம்ரின், சுபேதா ஆகிய மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் நசீம் அகிருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஏஜாஸ் மற்றும் நசீம் ஆகியோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in