
ஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த, வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் தாயுடன் வசித்த 5 வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக, பெரவள்ளூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வாலிபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.