தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கிய துறைகளில் அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
திருப்பூர் திருவளர் செல்வி, ஈரோடு ஐய்யனார், விருதுநகர் ஞானகவுரி, கோயமுத்தூர் பூபதி, பெரம்பலூர் அறிவழகன், திருச்சி பாலமுரளி, தஞ்சாவூர் சிவக்குமார், கன்னியாகுமரி புகழேந்தி, சேலம் முருகன், புதுக்கோட்டை மணிவண்ணன், தென்காசி கபீர், கள்ளக்குறிச்சி சரஸ்வதி, திருவள்ளூர் ராமன், சென்னை ஆறுமுகம், தஞ்சாவூர் முத்தையா ஆகியோர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை தலைமையிடத்தில் துணை இயக்குநர்களாக பணியாற்றும் பாலதண்டாயுதபாணி, மஞ்சுளா, சுமதி, குழந்தை ராஜன் திருநாவுக்கரசு ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி பணியிட மாற்றம் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.