நிலைத்தடுமாறி சாலையில் உருண்ட கார்; பறிபோன உயிர்கள்: வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது சோகம்

நிலைத்தடுமாறி சாலையில் உருண்ட கார்; பறிபோன உயிர்கள்: வழக்கில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது சோகம்

சாலையில் உள்ள சுவரில் கார் மோதிய விபத்தில் பெண் வழக்கறிஞர், டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த வழக்கறிஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் மைக்கேல் பாரதி. இவர் தனது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகாவுடன் சேலம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கில் ஆஜராகிவிட்டு காரில் சாத்தூரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, கார் நிலைத்தடுமாறி சாலையின் நடுபக்கத்தில் இருந்த சுவரில் வேகமாக மோதியது. இதில் கார் எதிர்ப்புறம் சாலையில் உருண்டோடியது.

இதில் வழக்கறிஞர் மோனிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மைநாயக்கனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in