சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு: போலீஸார் அதிர்ச்சி தகவல்

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாதிகளுடன் தொடர்பு: போலீஸார் அதிர்ச்சி தகவல்

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் அக்டோபர் 23-ம் தேதி அன்று கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் ( 28) என்பவர் பலியானார் .இது தொடர்பான விசாரணையில், இந்த விபத்து கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு என்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது. இந்த அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் 5 இடங்களில் போலீஸார் தற்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பட்டியலின்படி சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் தனியாக போலீஸார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in