17 வயது மாணவன் தற்கொலை: 2 மாதங்களுக்குப் பிறகு டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது

17 வயது மாணவன் தற்கொலை: 2 மாதங்களுக்குப் பிறகு டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது

சென்னை அம்பத்தூரில் காதல் தோல்வியால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டியூசன் ஆசிரியை 2 மாதங்களுக்குப் பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூர் வேணுகோபால் தெருவைச் சேர்ந்த 17 வயது சிவன் பிளஸ் 2 படித்துவிட்டு கல்லுரியில் சேர்வதற்காக இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவன் சரியாக படிக்கவில்லையென்று போலீஸ் தரப்பில், ஐபிசி 174 பிரிவின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவன், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அதை தற்கொலை செய்த மாணவனின் தாயிடம் காட்டவும் அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த புகைப்படத்துடன் மாணவனின் தாய், போலீஸில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாணவனுடன் நெருக்கமாக இருப்பவர் ஆசிரியை ஷர்மிளா என்பதும், அவரிடம் மூன்று ஆண்டுகளாக மாணவன் டியூசன் படித்ததும் தெரிய வந்தது. டியூசன் படிக்கும் மாணவனுக்கும், ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியைக்கு அவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியை ஷர்மிளாவை போலீஸார் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in