சென்னையில் 1653 சதவீதம் அதிகமாக பெய்த கோடைமழை: வானிலை நிலையத்தின் ஜில் அறிவிப்பு

சென்னையில் அதிக கோடைமழை
சென்னையில் அதிக கோடைமழைசென்னையில் 1653 சதவீதம் அதிகமாக பெய்த கோடைமழை: வானிலை நிலையத்தின் ஜில் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதி வரை கோடைமழை 15 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாகவும், சென்னையில் 1653 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவங்களாக மழைக்காலம் இருக்கிறது. மேலும் மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலம், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இருப்பினும் வெப்பச்சலனம், காற்றின் திசைவேக மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் கோடை காலத்தில் மழை பெய்யும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதி வரை வழக்கமாக 14.5 மி.மீ கோடைமழை பதிவாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு 16.7 மி.மீ பெய்துள்ளது. சென்னையில் மார்ச் 1-ம் தேதி முதல் 20ம் தேதி வரை கோடை மழை 1653 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் வழக்கமாக 3.2மி.மீ. மழை பெய்யும்.

இந்நிலையில் தற்போது 56.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 686 சதவீதம் கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை வழக்கமாக 5 மி.மீ. பெய்யும். இந்த நிலையில் தற்போது 39.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டையில் வழக்கமாக 5.5மி.மீ. மழை பதிவாகும்.ஆனால், தற்போது 35.6 சதவீதம் மழை பதிவாகியுள்ளது, இது 546 சதவீதம் கூடுதலாகும். தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கூடுதலாக கோடைமழை பெய்திருப்பது தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in