தமிழ்நாட்டில் 16 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்தமிழ்நாட்டில் 16 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம்!

தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வரித்துறை நிர்வாகம் இணை ஆணையராக இருந்த சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என்.பூங்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்ணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in