எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மீன்பிடிக்க விடாமல் தமிழக மீனவர்களை விரட்டி அடித்தனர். அத்துடன் இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்தனர்.

ஆனால், அதில் ஒரு படகு தப்பியது. மற்றொரு. படகில் இருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்து காரை நகர் முகாமிற்கு கொண்டு சென்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைக்க இருப்பதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in