கடத்தி வரப்பட்ட தங்கம்
கடத்தி வரப்பட்ட தங்கம்இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல்: பெண்கள் இருவர் கைது!

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல்: பெண்கள் இருவர் கைது!

இலங்கையிலிருந்து சென்னைக்கு, இரண்டு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ 24 கேரட் சுத்தத் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, இலங்கை பெண் பயணி உட்பட 2  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்படவே, அவரது உடைமைகளைச் சோதனையிட்டனர். அப்போது, அவருடைய கைப்பைக்குள் 37.25 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, இலங்கை பெண் பயணியைக் கைது செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான  நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்க அதிகாரிகள் சோதித்த போது, சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி  ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை சோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் 2  பார்சல்கள் மறைத்து வைத்து இருந்தார். 36 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுங்க அதிகாரிகள், தங்கத்தைப் பறிமுதல் செய்து, கடத்திய பயணியைக் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in