10, 20 ரூபாய் நாணயம்: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு

10, 20 ரூபாய் நாணயம்: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு

10, 20 ரூபாய் நாணயம் தொடர்பாக சென்னையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை அரசு பேருந்து நடத்துனர்கள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் பத்து ரூபாய் நாணயங்களை அரசு பேருந்து நடத்துனர்கள் வாங்குவது கிடையாது. அதை கொடுக்கும் பயணிகளை கீழே இறக்கி விடும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த வண்ணம் இருக்கிறது.

இதனிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்திகள் பரவி வந்த நிலையில், ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாணயம் செல்லும் என விளக்கம் அளித்தது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு வங்கிகள், அரசு பேருந்து நடத்துனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தது முதலில் வங்கிகள்தான். இதனால்தான் மளிகைக்கடைகள் முதல் பெட்டிக்கடை வரை 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துனர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டை நடத்துனர்கள் வழங்க வேண்டும். நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in