அரசியலுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும்!

அரசியலுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும்!

கோடநாடு விவாதமும் ராஜேஷ்குமார் கமென்ட்டும்

க்ரைம் நாவல்களில் ராஜேஷ்குமாருக்கு மிகப்பெரிய வாசகர் வட்டம் உள்ளது. அவரது படைப்புகள் இந்தக் கணினி யுகத்திலும் பிடிஎஃப் வடிவைத் தோற்கடித்து, புத்தக வடிவில் விற்பனையை குவித்துவருகிறது. மர்ம நாவல்களில் தனக்கென தனி முத்திரை பதிக்கும் ராஜேஷ்குமார் அரசியல் குறித்து பகடியாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதை அவரது முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசியலில் கோடநாடு விவகாரம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவையில் இதுபற்றி முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பேச அனுமதிக்காததால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததும் நடந்தது. இந்நிலையில் இதுபற்றி காங்கிரஸ் எம்எல்ஏ-வான செல்வப்பெருந்தகை கருத்துக் கூறும்போது, “ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன. சந்தேகங்களுக்கு பதில் அளிக்காமல் கோடநாடு விவகாரம் கண்டு அதிமுக அஞ்சுவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் ராஜேஷ்குமாரின் நாவல்களைக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய தொலைக்காட்சி செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை தன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருக்கும் ராஜேஷ்குமார், ‘எனக்கு அரசியல் பிடிக்காது. ஆனால் அரசியலுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும் போலிருக்கே..!’ என செம ஜாலியாக பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in