<p><strong>முடிவின் தொடக்கம்</strong></p><p>பூ</p><p>பழம்</p><p>தேங்காய்</p><p>வேட்டி சட்டை</p><p>தலைக்கறி படையலோடு</p><p>குவாட்டர் பாட்டில்</p><p>வைக்கும் வரை</p><p>அம்மா அழவில்லை</p><p>அப்பாவின் திவசத்தில்.</p><p><strong>-ந.சிவநேசன்</strong></p>.<p><strong>இரவை எழுதும் நிலா</strong></p><p><br>எப்படியும் பார்த்துவிடும்</p><p>ஆவலில் குழந்தைகள்</p><p>வராமலா போய்விடும் நிலா</p><p>அறிவியல் சோதனையில் வான்</p><p>இரண்டிற்கும் இடையில்</p><p>தாயும் பூமியும்</p><p><br>யாரை வெல்ல</p><p>யார் சொல்லை</p><p>இரவுகள் இயற்றுகின்றன</p><p><br>தாயின் ஏமாற்றுதலுக்கே</p><p>தலை கோதிவிட</p><p>தயாராகவே வந்துவிடுகிறது</p><p>வானில் வட்டமடிக்கும்</p><p>நிலா.</p><p><strong>- வீரசோழன்.க.சாே திருமாவளவன்</strong></p>.<p><strong>மலரும் முட்கள்</strong></p><p>வைராக்கியங்களை</p><p>ஒளித்துவைக்க வேண்டியதாயிருக்கிறது...</p><p>சண்டைக்காரனின் குழந்தை</p><p>புன்னகைக்கும்போது!</p><p><strong>-மு.முபாரக்</strong></p>.<p><strong>இறைவி</strong></p><p>தினம் தினம்</p><p>வழிபட முடியாத</p><p>கடவுளைக் கொண்ட அப்பனுக்கு</p><p>ஒரு செம்பில் நீர் தந்து</p><p>அருள்பாலித்து அனுப்புகிறாள் மகள்.</p><p><br><strong>- சே.கார்கவி</strong></p>.<p><strong>காணிக்கை</strong></p><p>அய்யனார்</p><p>கழுத்திலிருக்கும்</p><p>பூமாலையில்</p><p>தேனுறிஞ்சும்</p><p>வண்ணத்துப்பூச்சி</p><p>அரிவாளுக்கு</p><p>முத்தமிட்டுச்</p><p>செல்கிறது!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>கூடடைதல்</strong></p><p>வசந்தத்தின் தொடக்கத்தில்</p><p>கொல்லைப்புறத்திற்கு விருந்தாளியாய் வந்த</p><p>சிறு கீற்று வெயிலுடன் பேசியபடி இருந்தபோது</p><p>காற்றில் வந்து மெல்லென இறங்கியது ஓர் இறகு</p><p>வெயிலுக்கு விடை சொல்லி வீட்டிற்குள் வந்ததும்</p><p>கூடவே எடுத்துவந்த இறகிற்குக் கூட்டின் தேடல்</p><p>அதைச் சேர்ப்பிக்கும் வழியெனப்</p><p>பறவையை வரையத் தொடங்குகிறேன்</p><p>படபடக்கும் தாள்களின் சத்தத்தினுடே சிறகடித்தபடி</p><p>வந்தமர்கிறது அந்தச்</p><p>செம்போத்துக் குருவி</p><p><strong>- கி.சரஸ்வதி</strong></p>.<p><strong>வாட்ஸ்-அப் அருளும் வரம்</strong></p><p>முன்பு போல் இல்லை</p><p>எங்களால் நினைத்த நேரத்தில்</p><p>பேசிக்கொள்ள முடியும்</p><p>முத்தமிட வழி இருக்கிறது</p><p>கொஞ்சிக் குலாவிட செவ்வக பூமி</p><p>ஜன்னல் வைத்திருக்கிறது</p><p>படுத்தபடியே பார்க்க</p><p>ஓரம் கவிழ்ந்தபடியே சிரிக்க</p><p>ஒருவர் பார்க்க ஒருவர் தூங்க</p><p>என எல்லாமும் நிகழ்த்த</p><p>வாய்த்திருக்கிறோம்</p><p>முகம் ஏந்தி விழி நோக்கி</p><p>காதோரம் ரகசியம் பேசவும்</p><p>வழி உண்டு</p><p>ஒளி வழியே நுழைந்து</p><p>உடல் சேரும் நாளுக்கு மட்டும்தான்</p><p>காத்திருப்பு</p><p>அதுவும் நிகழும்</p><p>வாட்ஸ்-அப் கடவுள் ஆசீர்வதிக்கிறார்</p><p>அதுவரை</p><p>வயதாகாமல் இருக்கத்தான்</p><p>நம் வேண்டுதலும்!</p><p><strong>- கவிஜி</strong></p>.<p><strong>முகம்</strong></p><p>பிறந்ததிலிருந்து</p><p>அம்மாவிற்குப் பிடிக்கவில்லை அவனை</p><p>குடிகார அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>அண்ணனுக்குப் பிடிக்கவில்லை படிக்க வைக்காத</p><p>ஊதாரி அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>அக்காவிற்குப் பிடிக்கவில்லை</p><p>இன்று வரை திருமண செய்விக்காத</p><p>அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>பாட்டிக்கு மட்டும் பிடித்தது</p><p>அவளுடைய மகன் முகம் அவனுக்கு...</p><p><strong>- ச.மணிவண்ணன்</strong></p>
<p><strong>முடிவின் தொடக்கம்</strong></p><p>பூ</p><p>பழம்</p><p>தேங்காய்</p><p>வேட்டி சட்டை</p><p>தலைக்கறி படையலோடு</p><p>குவாட்டர் பாட்டில்</p><p>வைக்கும் வரை</p><p>அம்மா அழவில்லை</p><p>அப்பாவின் திவசத்தில்.</p><p><strong>-ந.சிவநேசன்</strong></p>.<p><strong>இரவை எழுதும் நிலா</strong></p><p><br>எப்படியும் பார்த்துவிடும்</p><p>ஆவலில் குழந்தைகள்</p><p>வராமலா போய்விடும் நிலா</p><p>அறிவியல் சோதனையில் வான்</p><p>இரண்டிற்கும் இடையில்</p><p>தாயும் பூமியும்</p><p><br>யாரை வெல்ல</p><p>யார் சொல்லை</p><p>இரவுகள் இயற்றுகின்றன</p><p><br>தாயின் ஏமாற்றுதலுக்கே</p><p>தலை கோதிவிட</p><p>தயாராகவே வந்துவிடுகிறது</p><p>வானில் வட்டமடிக்கும்</p><p>நிலா.</p><p><strong>- வீரசோழன்.க.சாே திருமாவளவன்</strong></p>.<p><strong>மலரும் முட்கள்</strong></p><p>வைராக்கியங்களை</p><p>ஒளித்துவைக்க வேண்டியதாயிருக்கிறது...</p><p>சண்டைக்காரனின் குழந்தை</p><p>புன்னகைக்கும்போது!</p><p><strong>-மு.முபாரக்</strong></p>.<p><strong>இறைவி</strong></p><p>தினம் தினம்</p><p>வழிபட முடியாத</p><p>கடவுளைக் கொண்ட அப்பனுக்கு</p><p>ஒரு செம்பில் நீர் தந்து</p><p>அருள்பாலித்து அனுப்புகிறாள் மகள்.</p><p><br><strong>- சே.கார்கவி</strong></p>.<p><strong>காணிக்கை</strong></p><p>அய்யனார்</p><p>கழுத்திலிருக்கும்</p><p>பூமாலையில்</p><p>தேனுறிஞ்சும்</p><p>வண்ணத்துப்பூச்சி</p><p>அரிவாளுக்கு</p><p>முத்தமிட்டுச்</p><p>செல்கிறது!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>கூடடைதல்</strong></p><p>வசந்தத்தின் தொடக்கத்தில்</p><p>கொல்லைப்புறத்திற்கு விருந்தாளியாய் வந்த</p><p>சிறு கீற்று வெயிலுடன் பேசியபடி இருந்தபோது</p><p>காற்றில் வந்து மெல்லென இறங்கியது ஓர் இறகு</p><p>வெயிலுக்கு விடை சொல்லி வீட்டிற்குள் வந்ததும்</p><p>கூடவே எடுத்துவந்த இறகிற்குக் கூட்டின் தேடல்</p><p>அதைச் சேர்ப்பிக்கும் வழியெனப்</p><p>பறவையை வரையத் தொடங்குகிறேன்</p><p>படபடக்கும் தாள்களின் சத்தத்தினுடே சிறகடித்தபடி</p><p>வந்தமர்கிறது அந்தச்</p><p>செம்போத்துக் குருவி</p><p><strong>- கி.சரஸ்வதி</strong></p>.<p><strong>வாட்ஸ்-அப் அருளும் வரம்</strong></p><p>முன்பு போல் இல்லை</p><p>எங்களால் நினைத்த நேரத்தில்</p><p>பேசிக்கொள்ள முடியும்</p><p>முத்தமிட வழி இருக்கிறது</p><p>கொஞ்சிக் குலாவிட செவ்வக பூமி</p><p>ஜன்னல் வைத்திருக்கிறது</p><p>படுத்தபடியே பார்க்க</p><p>ஓரம் கவிழ்ந்தபடியே சிரிக்க</p><p>ஒருவர் பார்க்க ஒருவர் தூங்க</p><p>என எல்லாமும் நிகழ்த்த</p><p>வாய்த்திருக்கிறோம்</p><p>முகம் ஏந்தி விழி நோக்கி</p><p>காதோரம் ரகசியம் பேசவும்</p><p>வழி உண்டு</p><p>ஒளி வழியே நுழைந்து</p><p>உடல் சேரும் நாளுக்கு மட்டும்தான்</p><p>காத்திருப்பு</p><p>அதுவும் நிகழும்</p><p>வாட்ஸ்-அப் கடவுள் ஆசீர்வதிக்கிறார்</p><p>அதுவரை</p><p>வயதாகாமல் இருக்கத்தான்</p><p>நம் வேண்டுதலும்!</p><p><strong>- கவிஜி</strong></p>.<p><strong>முகம்</strong></p><p>பிறந்ததிலிருந்து</p><p>அம்மாவிற்குப் பிடிக்கவில்லை அவனை</p><p>குடிகார அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>அண்ணனுக்குப் பிடிக்கவில்லை படிக்க வைக்காத</p><p>ஊதாரி அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>அக்காவிற்குப் பிடிக்கவில்லை</p><p>இன்று வரை திருமண செய்விக்காத</p><p>அப்பாவின் முகம் அவனுக்கு</p><p>பாட்டிக்கு மட்டும் பிடித்தது</p><p>அவளுடைய மகன் முகம் அவனுக்கு...</p><p><strong>- ச.மணிவண்ணன்</strong></p>