<p><strong>யுத்தம்</strong></p><p><br>குண்டு துளைத்த</p><p>கட்டிட இடுக்கிலிருந்து</p><p>புகைந்தபடி</p><p>வெளியேறிக்கொண்டிருந்தன</p><p>சாமானியக் குடும்பத்தின்</p><p>எதிர்காலக் கனவுகள்</p><p><br><strong>- கா.ந.கல்யாணசுந்தரம்</strong></p>.<p><strong>கனம்</strong></p><p><br>காற்றில்லா</p><p>பலூன்கூட</p><p>கனமாகத்</p><p>தெரிகிறது</p><p>கடைகளில்</p><p>மாதக்கடைசியில்</p><p>பிள்ளையின்</p><p>பிறந்த நாள்!</p><p><br>- <strong>இரட்டைக்கரடு மு.இளங்கோவன்</strong></p>.<p><strong>தொடர்பு எல்லை</strong></p><p><br>சிட்டுக்குருவியின்</p><p>கீச்சலில் குறுந்தகவல்</p><p>பூனைக்குட்டியின்</p><p>மியாவில்</p><p>நோட்டிஃபிகேஷன்</p><p>காதல் சோகம் தத்துவமென</p><p>மனதிற்கேற்ப ரிங்டோன்கள்</p><p>சிறுவொலிக் குறிப்புகள்</p><p>சிணுங்கித் துரத்துகின்றன</p><p>தூரத்து மனிதர்களை...</p><p>சாலையோர</p><p>விளிம்பு மனிதர்களின்</p><p>பசி ஆலாபனைகள்தான்</p><p>நுழைய</p><p>மறுக்கின்றன</p><p>செவிகளின் தொடர்பு எல்லைக்குள்!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>துயரக் கடல்</strong></p><p><br>எல்லை தாண்டியதாக</p><p>சுடப்படுவதும்</p><p>கவிழும் படகால்</p><p>உள்ளே விழுந்து</p><p>உயிர்விடுவதுமாக</p><p>தனக்குள் நடக்கும்</p><p>மீனவ மரணங்களிலிருந்து</p><p>மீளமுடியாத் துயரத்தோடு</p><p>ஒவ்வொரு முறையும்</p><p>அலைத் தலைகளால்</p><p>கரையில்</p><p>முட்டி மோதிக்கொள்கிறது</p><p>கடல்.</p><p><strong>- காசாவயல் கண்ணன்</strong></p>.<p><strong>எல்லை ஒப்பந்தம்</strong></p><p>சுற்றுச்சுவர் தாண்டிய இனிப்பு மாங்காய்கள்</p><p>எட்டிப்பார்க்கும் ஒற்றை ரோஜா</p><p>கை நீட்டிப் பறிக்கக் கறிவேப்பிலை</p><p>விருந்துக்கு வாழையிலைகள்</p><p>எல்லாம் சரிதான்</p><p>மரத்தின் சருகுகள் மட்டும்</p><p>உதிராமலிருக்க வேண்டும் இந்தப் பக்கம்.</p><p><br><strong>- கி.சரஸ்வதி</strong></p>.<p><strong>நதியின் பரிசு</strong></p><p>நீர் வரத்து குறைந்தப் பின்னாலும்</p><p>தரையோடு பரவி</p><p>தன்மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டு</p><p>பொடி நடையாகச் செல்லும் சிறுநதியொன்றில்</p><p>கைகளில் கொள்ளும் கற்களை எடுத்து</p><p>ஒவ்வொன்றாக எறிகிறது குழந்தையொன்று</p><p>ஒவ்வொரு எறிதலுக்கும்</p><p>ஒரு புன்னகையைத் தெறிக்கவிட்டு</p><p>ஓடுகிறது அந்நதி...</p><p><br><strong>- நேசன் மகதி</strong></p>.<p><strong>வேகம்</strong></p><p>குழந்தைகளோடு</p><p>மிட்டாய் கடைகளை</p><p>கடக்கும்போதெல்லாம்</p><p>வேகம் கூடுகிறது...</p><p>ஏழைத் தந்தைகளின் கால்கள்!</p><p><br><strong>-மு.முபாரக்</strong></p>
<p><strong>யுத்தம்</strong></p><p><br>குண்டு துளைத்த</p><p>கட்டிட இடுக்கிலிருந்து</p><p>புகைந்தபடி</p><p>வெளியேறிக்கொண்டிருந்தன</p><p>சாமானியக் குடும்பத்தின்</p><p>எதிர்காலக் கனவுகள்</p><p><br><strong>- கா.ந.கல்யாணசுந்தரம்</strong></p>.<p><strong>கனம்</strong></p><p><br>காற்றில்லா</p><p>பலூன்கூட</p><p>கனமாகத்</p><p>தெரிகிறது</p><p>கடைகளில்</p><p>மாதக்கடைசியில்</p><p>பிள்ளையின்</p><p>பிறந்த நாள்!</p><p><br>- <strong>இரட்டைக்கரடு மு.இளங்கோவன்</strong></p>.<p><strong>தொடர்பு எல்லை</strong></p><p><br>சிட்டுக்குருவியின்</p><p>கீச்சலில் குறுந்தகவல்</p><p>பூனைக்குட்டியின்</p><p>மியாவில்</p><p>நோட்டிஃபிகேஷன்</p><p>காதல் சோகம் தத்துவமென</p><p>மனதிற்கேற்ப ரிங்டோன்கள்</p><p>சிறுவொலிக் குறிப்புகள்</p><p>சிணுங்கித் துரத்துகின்றன</p><p>தூரத்து மனிதர்களை...</p><p>சாலையோர</p><p>விளிம்பு மனிதர்களின்</p><p>பசி ஆலாபனைகள்தான்</p><p>நுழைய</p><p>மறுக்கின்றன</p><p>செவிகளின் தொடர்பு எல்லைக்குள்!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>துயரக் கடல்</strong></p><p><br>எல்லை தாண்டியதாக</p><p>சுடப்படுவதும்</p><p>கவிழும் படகால்</p><p>உள்ளே விழுந்து</p><p>உயிர்விடுவதுமாக</p><p>தனக்குள் நடக்கும்</p><p>மீனவ மரணங்களிலிருந்து</p><p>மீளமுடியாத் துயரத்தோடு</p><p>ஒவ்வொரு முறையும்</p><p>அலைத் தலைகளால்</p><p>கரையில்</p><p>முட்டி மோதிக்கொள்கிறது</p><p>கடல்.</p><p><strong>- காசாவயல் கண்ணன்</strong></p>.<p><strong>எல்லை ஒப்பந்தம்</strong></p><p>சுற்றுச்சுவர் தாண்டிய இனிப்பு மாங்காய்கள்</p><p>எட்டிப்பார்க்கும் ஒற்றை ரோஜா</p><p>கை நீட்டிப் பறிக்கக் கறிவேப்பிலை</p><p>விருந்துக்கு வாழையிலைகள்</p><p>எல்லாம் சரிதான்</p><p>மரத்தின் சருகுகள் மட்டும்</p><p>உதிராமலிருக்க வேண்டும் இந்தப் பக்கம்.</p><p><br><strong>- கி.சரஸ்வதி</strong></p>.<p><strong>நதியின் பரிசு</strong></p><p>நீர் வரத்து குறைந்தப் பின்னாலும்</p><p>தரையோடு பரவி</p><p>தன்மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டு</p><p>பொடி நடையாகச் செல்லும் சிறுநதியொன்றில்</p><p>கைகளில் கொள்ளும் கற்களை எடுத்து</p><p>ஒவ்வொன்றாக எறிகிறது குழந்தையொன்று</p><p>ஒவ்வொரு எறிதலுக்கும்</p><p>ஒரு புன்னகையைத் தெறிக்கவிட்டு</p><p>ஓடுகிறது அந்நதி...</p><p><br><strong>- நேசன் மகதி</strong></p>.<p><strong>வேகம்</strong></p><p>குழந்தைகளோடு</p><p>மிட்டாய் கடைகளை</p><p>கடக்கும்போதெல்லாம்</p><p>வேகம் கூடுகிறது...</p><p>ஏழைத் தந்தைகளின் கால்கள்!</p><p><br><strong>-மு.முபாரக்</strong></p>