
உருகும் சாலை
கொளுத்தும் வெயிலில்
நெடுஞ்சாண்கிடையாக
வெகுநேரம் விழுந்து கிடந்து
இடைவிடாது வாகனங்கள்
முதுகில் ஏறி இறங்கிய
வலியையும்
சுகமாக
அனுபவித்துக் கிடக்கிறது
குறுக்கும் நெடுக்குமாக
நடந்து செல்லும்
குழந்தையின்
பிஞ்சுக் காலடித் தடம் பட்ட
நெடுஞ்சாலை.
- காசாவயல் கண்ணன்
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.