
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகிறார்கள். இவர்களை முன்னுக்குக் கொண்டுவர அரசாங்கமும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனாலும், அனைத்துத் தகுதியும் இருந்தும் தனக்குக் கிடைக்க வேண்டிய காவலர் பணிக்காக ஆண்டுக் கணக்கில் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் திருநங்கை ஆராதனா.
தேனியைச் சேர்ந்த ஆராதனா சிறுவயதிலேயே தாயை இழந்தவர். மகள் திருநங்கை என்பதாலோ என்னவோ தந்தையும் இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து பாட்டி தான் இவரை படிக்கவைத்து ஆளாக்கினார். இப்போதும் பாட்டியின் நிழலிலேயே இருக்கும் ஆராதனா, தினமும் மாவு பாக்கெட் வியாபாரம் செய்து பிழைக்கிறார். திருநங்கை என்பதாலேயே சொந்தபந்தங்கள் ஒதுக்கிவிட்டாலும் அவர்களுக்கு மத்தியில் உயர்வான நிலைக்கு வந்து வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இந்தப் பாட்டிக்கும் பேத்திக்கும்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.