
கும்பகோணம் மகாமகக் குளத்தின் மேல்கரையில் இருக்கிறது அந்தக் கடை. மதிய நேரம்... கொளுத்தும் வெயிலில் கடையின் உள்ளே நுழைந்த வாடிக்கையாளர் ஒருவர், “ ஒரு கிளாஸ் வோட்கா கொடுங்க” என்று கேட்டபடி அமர்கிறார். அங்கிருக்கும் பெண்கள் சிரித்தபடி அவருக்கு லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அவரும் சிரித்தபடி அதைவாங்கி அருந்துகிறார். இன்னொருவர் வந்து, “ ஒரு கிளாஸ் பிராந்தி” என்று ஆர்டர் கொடுக்க, அவருக்கு திராட்சை ஜூஸ் கொடுக்கப்படுகிறது. அது டாஸ்மாக் கடையில்லை என்பதும், அவர்கள் விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்கிறார்கள் என்பதும் இருதரப்புக்கும் தெரியும். இருந்தும் அவர்கள் அப்படிக் கேட்பதற்கு காரணம் ‘ஜூஸ்மாக்’ என்ற அந்தக் கடையின் பெயர்ப்பலகைதான்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.