குழந்தைமை விதிபொம்மைகள்உடைபடாத வீட்டில்பொம்மைகளாகவேஇருக்கின்றனர்குழந்தைகள்.- கி.ரவிக்குமார்.வெற்றிடமென...அறுபட்ட மரம் ஒன்றின்இறுதிக்காற்று ஓடி வந்துகொஞ்சம் ஒளிந்திருக்கலாம்குழந்தையொன்று.ஏதோவொரு காதலின்முடிவுரைக்கானகண்ணீர் துளியின் சிதறல்கறையாகக் கொஞ்சம் படிந்திருக்கலாம்.வானத்தின்ஒளிக்கீற்று ஒன்றுபட்டுத்தெறித்துப் பதுங்கியிருக்கலாம்.பாடலின்இன்னிசைப் பிசிறொன்றுஇவற்றுடன் கலந்துமிருக்கலாம்...வெற்றிடமென நீங்கள் குறிக்கும்அவ்விடத்தில்!-கெளந்தி மு.விருட்சம்எத்தனை முறை வெட்டினாலும்மன்னித்து திரும்பவும் துளிர்த்துஇலவசமாக நிழலைபிரியத்துடன் பூமிக்குபரப்புகிறதுபூக்கள் தெளித்து சிலிர்ப்பூட்டுகிறது...தாயாகவும் காதலியாகவும்மாறி மாறி உருவெடுத்துமறுபடியும் துளிர்க்கிறதுமன்னிக்க மட்டுமே தெரிந்தமரம்.- ச.ஆனந்தகுமார்.பறத்தல் மொழிகூட்டுப்புழுப் பருவத்தின்நீள் உறக்கக்கடினப் பொழுதுகளையெல்லாம்சிறகின் வண்ணங்களில்படபடப்பாய் மொழிபெயர்க்கிறதுபட்டாம்பூச்சி...- கி.சரஸ்வதி.பக்தனாகும் தருணம்என் புருவங்களின்இடைவெளி தூரத்தைதன் கையினால்பாலமிட்டுதிருநீறு என் விழிகளில்விழுந்துவிடாதவாறுஇதழ் குவித்துஅவள் ஊதி ஒதுக்கும்தருணத்திற்காகவேஒவ்வொரு முறையும்நாத்திகம் தொலைக்கிறேன்நான்.- மகேஷ் சிபி.நீர் சிற்பம்இறுதியாகஎவ்வடிவமும்அடையவியலாவாதையில்தான்அனைத்து உருவங்களின்பிம்பங்களையும்சிறைப்பிடித்துவிடுகிறதுமழைத்துளியின்கண்ணீர்.-ரகுநாத் வ.பாடத்திட்டத்திற்கு வெளியே!மீன்களின் பள்ளியில்பாடமாக்கப்படவே இல்லைதூண்டிலும் வலையும்இன்னபிற மீன்பிடிஉத்திகளும்!-வீ.விஷ்ணுகுமார்.தோற்கும் யாசகம்சில்லறை இல்லையெனச்சொல்லிக் கடக்ககனக்கிறதுவெற்று சட்டைப் பை...- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்
குழந்தைமை விதிபொம்மைகள்உடைபடாத வீட்டில்பொம்மைகளாகவேஇருக்கின்றனர்குழந்தைகள்.- கி.ரவிக்குமார்.வெற்றிடமென...அறுபட்ட மரம் ஒன்றின்இறுதிக்காற்று ஓடி வந்துகொஞ்சம் ஒளிந்திருக்கலாம்குழந்தையொன்று.ஏதோவொரு காதலின்முடிவுரைக்கானகண்ணீர் துளியின் சிதறல்கறையாகக் கொஞ்சம் படிந்திருக்கலாம்.வானத்தின்ஒளிக்கீற்று ஒன்றுபட்டுத்தெறித்துப் பதுங்கியிருக்கலாம்.பாடலின்இன்னிசைப் பிசிறொன்றுஇவற்றுடன் கலந்துமிருக்கலாம்...வெற்றிடமென நீங்கள் குறிக்கும்அவ்விடத்தில்!-கெளந்தி மு.விருட்சம்எத்தனை முறை வெட்டினாலும்மன்னித்து திரும்பவும் துளிர்த்துஇலவசமாக நிழலைபிரியத்துடன் பூமிக்குபரப்புகிறதுபூக்கள் தெளித்து சிலிர்ப்பூட்டுகிறது...தாயாகவும் காதலியாகவும்மாறி மாறி உருவெடுத்துமறுபடியும் துளிர்க்கிறதுமன்னிக்க மட்டுமே தெரிந்தமரம்.- ச.ஆனந்தகுமார்.பறத்தல் மொழிகூட்டுப்புழுப் பருவத்தின்நீள் உறக்கக்கடினப் பொழுதுகளையெல்லாம்சிறகின் வண்ணங்களில்படபடப்பாய் மொழிபெயர்க்கிறதுபட்டாம்பூச்சி...- கி.சரஸ்வதி.பக்தனாகும் தருணம்என் புருவங்களின்இடைவெளி தூரத்தைதன் கையினால்பாலமிட்டுதிருநீறு என் விழிகளில்விழுந்துவிடாதவாறுஇதழ் குவித்துஅவள் ஊதி ஒதுக்கும்தருணத்திற்காகவேஒவ்வொரு முறையும்நாத்திகம் தொலைக்கிறேன்நான்.- மகேஷ் சிபி.நீர் சிற்பம்இறுதியாகஎவ்வடிவமும்அடையவியலாவாதையில்தான்அனைத்து உருவங்களின்பிம்பங்களையும்சிறைப்பிடித்துவிடுகிறதுமழைத்துளியின்கண்ணீர்.-ரகுநாத் வ.பாடத்திட்டத்திற்கு வெளியே!மீன்களின் பள்ளியில்பாடமாக்கப்படவே இல்லைதூண்டிலும் வலையும்இன்னபிற மீன்பிடிஉத்திகளும்!-வீ.விஷ்ணுகுமார்.தோற்கும் யாசகம்சில்லறை இல்லையெனச்சொல்லிக் கடக்ககனக்கிறதுவெற்று சட்டைப் பை...- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்