
மெளனக் கவிதை
மழையில் நனைவது
பிடிக்கும்
வானவில்லைப் பிடிக்கும்
சுற்றி வரும்
வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கும்
அதிகாலையில் புல்லின் மீது
அமர்ந்திருக்கும்
பனித்துளியைப் பிடிக்குமென
எழுதிய கவிதையை
கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்...
கணவனுக்குப் பிடிக்காதென!
-மு.முபாரக்
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.