<p><strong>பெத்த மனசு</strong></p><p><br>மகன் போட்ட</p><p>அன்னையர் தின</p><p>வாழ்த்து ஸ்டேட்டஸுக்கு</p><p>லைக் கிடைத்தது</p><p>முதியோர் இல்லத்தில் இருந்த</p><p>அம்மாவிடமிருந்து!</p><p><strong>- பாளை பசும்பொன்</strong></p> .<p><strong>முதலும் முடிவும்</strong></p><p>சுப நிகழ்வொன்றை</p><p>குத்து விளக்கேற்றி</p><p>தொடங்கிவைத்த</p><p>மெழுகுவர்த்தியின் மிச்சம்</p><p>அஞ்சலி செலுத்தியபடி</p><p>நீடிக்கிறது</p><p>மற்றுமொரு பொழுதில்...</p><p><strong>- சாமி கிரிஷ்</strong></p>.<p><strong>பிம்பங்கள்</strong></p><p>புதிதாக மீன்தொட்டி</p><p>வாங்கி குளத்து மீன்களை</p><p>பிடித்து வளர்த்தார் பணக்காரர்</p><p>பாசி உண்ணாமல்</p><p>பட்டினி கிடந்தாலும்</p><p>குளமென்றே</p><p>நீந்திக்கொண்டிருந்தன</p><p>மீன்கள்...</p><p><strong>- கா.கவிப்ரியா</strong></p>.<p><strong>குவளைக்கடல்</strong></p><p>தளும்பத் தளும்ப</p><p>நீரோடு அச்சமும்</p><p>நிறைந்திருப்பதால்</p><p>குவளையின்</p><p>நுனியில் தாகத்தோடே</p><p>ஊர்ந்து திரிகிறது</p><p>எறும்பு!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>தவம்</strong></p><p>உளி பட்ட வலிகள்</p><p>அதன் முனையளவும்</p><p>பேசப்படவில்லை</p><p>கருணை கசிய</p><p>போற்றப்படுகிறது</p><p>சிற்பம் ஆகிட</p><p>கல் பட்ட வலி!</p><p><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></p>.<p><strong>இரு சொற்கள்</strong></p><p>இவ்வளவு காலம்</p><p>பகையாளியாக</p><p>இருந்த வீட்டின்</p><p>படியேறக் கால்கள்</p><p>தடுமாறும்போது</p><p>தாங்கிப் பிடிக்கிறது</p><p>‘வாங்க' எனும் சொல்...</p><p>நீட்டும் பத்திரிகையை</p><p>நடுங்கியபடி</p><p>எடுக்கும் கைகளை</p><p>ஆதரவாய்ப் பற்றிக்கொள்கிறது</p><p>'வந்துடுங்க' எனும் சொல்.</p><p><strong>- ந.சிவநேசன்</strong></p>.<p><strong>புன்னகை</strong></p><p>வெய்யிலில் தப்பிய</p><p>மேய்ப்பர்கள்</p><p>ஓய்வெடுக்கவென</p><p>தனது நிழலில்</p><p>அமரும் வேளையிலும்</p><p>பட்டாம்பூச்சிகளில் சில</p><p>தன் மீசையோரம்</p><p>சிறகடிக்கும்பொழுதும்</p><p>திருவிழாக்கால உற்சாகம்</p><p>குடியேற கம்பீரமாகச்</p><p>சிரித்துக்கொள்கிறார்</p><p>காட்டு மாடசாமி.</p><p><strong>- கி.சரஸ்வதி </strong></p>
<p><strong>பெத்த மனசு</strong></p><p><br>மகன் போட்ட</p><p>அன்னையர் தின</p><p>வாழ்த்து ஸ்டேட்டஸுக்கு</p><p>லைக் கிடைத்தது</p><p>முதியோர் இல்லத்தில் இருந்த</p><p>அம்மாவிடமிருந்து!</p><p><strong>- பாளை பசும்பொன்</strong></p> .<p><strong>முதலும் முடிவும்</strong></p><p>சுப நிகழ்வொன்றை</p><p>குத்து விளக்கேற்றி</p><p>தொடங்கிவைத்த</p><p>மெழுகுவர்த்தியின் மிச்சம்</p><p>அஞ்சலி செலுத்தியபடி</p><p>நீடிக்கிறது</p><p>மற்றுமொரு பொழுதில்...</p><p><strong>- சாமி கிரிஷ்</strong></p>.<p><strong>பிம்பங்கள்</strong></p><p>புதிதாக மீன்தொட்டி</p><p>வாங்கி குளத்து மீன்களை</p><p>பிடித்து வளர்த்தார் பணக்காரர்</p><p>பாசி உண்ணாமல்</p><p>பட்டினி கிடந்தாலும்</p><p>குளமென்றே</p><p>நீந்திக்கொண்டிருந்தன</p><p>மீன்கள்...</p><p><strong>- கா.கவிப்ரியா</strong></p>.<p><strong>குவளைக்கடல்</strong></p><p>தளும்பத் தளும்ப</p><p>நீரோடு அச்சமும்</p><p>நிறைந்திருப்பதால்</p><p>குவளையின்</p><p>நுனியில் தாகத்தோடே</p><p>ஊர்ந்து திரிகிறது</p><p>எறும்பு!</p><p><strong>- ரகுநாத் வ</strong></p>.<p><strong>தவம்</strong></p><p>உளி பட்ட வலிகள்</p><p>அதன் முனையளவும்</p><p>பேசப்படவில்லை</p><p>கருணை கசிய</p><p>போற்றப்படுகிறது</p><p>சிற்பம் ஆகிட</p><p>கல் பட்ட வலி!</p><p><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></p>.<p><strong>இரு சொற்கள்</strong></p><p>இவ்வளவு காலம்</p><p>பகையாளியாக</p><p>இருந்த வீட்டின்</p><p>படியேறக் கால்கள்</p><p>தடுமாறும்போது</p><p>தாங்கிப் பிடிக்கிறது</p><p>‘வாங்க' எனும் சொல்...</p><p>நீட்டும் பத்திரிகையை</p><p>நடுங்கியபடி</p><p>எடுக்கும் கைகளை</p><p>ஆதரவாய்ப் பற்றிக்கொள்கிறது</p><p>'வந்துடுங்க' எனும் சொல்.</p><p><strong>- ந.சிவநேசன்</strong></p>.<p><strong>புன்னகை</strong></p><p>வெய்யிலில் தப்பிய</p><p>மேய்ப்பர்கள்</p><p>ஓய்வெடுக்கவென</p><p>தனது நிழலில்</p><p>அமரும் வேளையிலும்</p><p>பட்டாம்பூச்சிகளில் சில</p><p>தன் மீசையோரம்</p><p>சிறகடிக்கும்பொழுதும்</p><p>திருவிழாக்கால உற்சாகம்</p><p>குடியேற கம்பீரமாகச்</p><p>சிரித்துக்கொள்கிறார்</p><p>காட்டு மாடசாமி.</p><p><strong>- கி.சரஸ்வதி </strong></p>