
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்” என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் வெளிப்படையாக ’கடமை’யைப் பற்றியும் உள்ளுக்குள் திமுகவை மறைத்தும் எம்ஜிஆர் (அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார்) பாடுவார். ஆனால் அவரது அபிமானிகளுக்கு கடமை எல்லாம் ரெண்டாம்பட்சம் தான். எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துத்தான் அவர்களுக்கு மூச்சு. மறைந்து 35 ஆண்டுகள் நெருங்கினாலும்கூட இன்றும் அபிமானிகளின் மனதில் அவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. அப்படியான அபிமானிகளில் ஒருவர் தான் கணேஷ் பாண்டியன்.
சாத்தான்குளத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கும் கணேஷ் பாண்டியன், தனது உணவகத்தில் வயோதிகர்களுக்கு 40 ரூபாயில் மூன்று வேளை உணவு கொடுக்கிறார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா எனக் கேள்விப்பட்டு காமதேனுவுக்காக அவரைச் சந்தித்தோம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.