
கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவிவருவது கவலையளிக்கிறது. கடந்த 45 நாட்களில் 170-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கேரளம், கர்நாடகம் எனத் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு நிலவுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்நிலையில், புத்தாண்டு தொடங்கி முதல் ஒரு மாதத்திலேயே தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. பருவநிலை மாறிவரும் சூழலில் இதன் பாதிப்பு அதிகரிக்கும் என்றே எச்சரிக்கப்படுகிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.