போர் நிறுத்தப்படுமா?: உக்ரைன்- ரஷ்ய அமைச்சர்கள் பேச்சு

போர் நிறுத்தப்படுமா?: உக்ரைன்- ரஷ்ய அமைச்சர்கள் பேச்சு

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

துருக்கியில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது என உக்ரைன் அமைச்சர் டேவிட் அரகாமியா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in