சீன அதிபருடன் ஜோ பைடன் பேசியது என்ன?

சீன அதிபருடன் ஜோ பைடன் பேசியது என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்ற ஒன்றை காரணத்தை கூறி அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனை சீனா உள்ளிட்ட சில நாடுகளை தவிர மற்ற நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துள்ளன. மேலும் பல சேவை நிறுவனங்களுக்கும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்யாவுக்கு உதவிகள் செய்தால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என சீனாவை அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்த ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகள் கொடுத்து உதவினால் சீனா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என சீன அதிபரை அமெரிக்க அதிபர் எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் - ரஷ்ய பிரச்சினைக்கு தூதரக பேச்சுகள் மூலம் தீர்வு காண்பதே சரி என பைடன், ஷி ஜின்பிங் ஆகிய இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு உதவாமல் விலகியிருந்தால் அதற்கான பலன்கள் கிடைக்கும் என சீனாவுக்கு ஆசை காட்டும் நோக்கில் இந்த அழைப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in