3 நாடுகளில் திடீரென குறைந்த கரோனா பாதிப்பு!

உலக அளவில் 35 கோடியை தாண்டியது
3 நாடுகளில் திடீரென குறைந்த கரோனா பாதிப்பு!
hindu கோப்பு படம்

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலியில் திடீரென கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் கரோனா பாதிப்பு 35 கோடியை தாண்டியுள்ளது.

2019ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 14 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் தினசரி பாதிப்பு திடீரென குறைந்துள்ளது. அங்கு புதிதாக 3,12,314 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வரும் நிலையில், இதுவரை 39,237,264 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

இங்கிலாந்தில் தினசரி கேஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இங்கிலாந்தில் 15,784,489 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 16,390,818 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் 9,781,191 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 171,263 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in