
உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் எனக் கடந்த சில வாரங்களாகவே சொல்லப்பட்டுவந்தது. மறுபக்கம், முந்தைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது, அத்தனை எளிதில் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவிவிடாது என்றும் ஒரு நம்பிக்கையும் நிலவியது. ஆனால், இன்றைய தேதிக்கு அந்த நம்பிக்கையும் பொய்த்துவிடும் என்றே தெரிகிறது. அமெரிக்க உளவுத் துறையினரும் இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்யப் படைகளுடன், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத அமைப்புகளும் உக்ரைன் மீதான தாக்குதலில் ஈடுபடவிருக்கிறார்கள். அதற்கான போர்ப்பயிற்சிகளிலும் அப்படைகள் ஈடுபட்டிருக்கின்றன.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்துவரும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 20-ல் நிறைவடைகின்றன. அதற்கு முன்னதாக ஊடுருவல் நிகழலாம் என ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். உக்ரைன் தலைநகர் கீயெவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியிருப்பது, அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இவ்விவகாரம் எந்த திசையில் செல்லும்? ரஷ்யாவைத் தடுக்க உலக நாடுகளின் கைவசம் இருக்கும் உபாயம் என்ன? பார்க்கலாம்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.