
“உணவு, எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாடு இன்னும் மோசமான நிலையை எட்டும். நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளதால் உடனடியாக நாம் அதை ஆராய வேண்டும். இல்லையென்றால் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளது” என 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தன கூறிய வார்த்தைகள் நம் அண்டை நாட்டின் அவல நிலையைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன. அதைவிட மிகவும் மோசமான ஆரூடத்தை முன்னாள் அமைச்சர் விஜயதாசா ராஜபக்ச கூறியிருக்கிறார். “இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓடும்” என்பதுதான் அவரது எச்சரிக்கை.
அபரிமிதமான இயற்கை வளம், அறிவும் உழைப்பும் மிக்க மனித வளம் கொண்ட ஒரு தேசம் இப்படிச் சீரழிந்து கிடப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தின் மோசமான நிர்வாகமும், அப்பட்டமான சிங்கள பவுத்த தேசியவாதமும்தான் காரணம் என்கிறார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.