‘ராஜபக்ச அரசின் கொள்கையை மாற்றப்போகிறேன்.. கோத்தபய பதவி விலகமாட்டார்’: ரணில் நெத்தியடி


‘ராஜபக்ச அரசின் கொள்கையை மாற்றப்போகிறேன்.. கோத்தபய பதவி விலகமாட்டார்’: ரணில் நெத்தியடி

ராஜபக்ச அரசின் அனைத்துக் கொள்கைகளையும் மாற்றப்போகிறேன் என்று தெரிவித்துள்ள இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச விலகுவது ஒரு போதும் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் பெற்ற பின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது தான் எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக உணவு, மருந்து, எரிபொருள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ரணில் விக்ரமசிங்கேவை அவர் பிரதமராக நியமித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று இலங்கை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், "கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது. ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in