300 பேரைக் காணவில்லை... பெட்ரோல் மையத்தில் பயங்கர வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 68 ஆனது!

பற்றி எரியும் தீ
பற்றி எரியும் தீ
Updated on
1 min read

நகோா்னோ - கராபக் பிராந்தியத்தில் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68 ஆக உயா்ந்துள்ளது.

அர்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ - கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்த நிலையில், 1994-ம் ஆண்டு போருக்குப் பிறகு அர்மீனியாவின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

அர்மீனியாவுக்குச் செல்லும் மக்கள்
அர்மீனியாவுக்குச் செல்லும் மக்கள்

அதைத் தொடர்ந்து இருநாடுகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 6,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இந்நிலையில், நகோா்னோ - கராபக் பிராந்தியத்தில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

தாக்குதலை சமாளிக்க முடியாத அர்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டு, ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா். அதையடுத்து, நகோா்னா -கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது.

இதையடுத்து மக்கள் அர்மீனியாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அஜா்பைஜானின் முற்றுகையால் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அர்மீனியாவுக்குச் செல்வதற்காக வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனா்.

இதன் காரணமாக கடந்த திங்கள் கிழமை இரவு நகோா்னோ - கராபக் பிராந்திய தலைநகா் ஸ்டெபானகா்ட்டின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்  உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ள நிலையில், 300 போ் காயமடைந்துள்ளனா். மேலும், 105 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in