
நோபல் பரிசு பெற்ற இயற்பியல் ஆய்வாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் ஏலம் விடப்பட்டுள்ளன.
இன்று வரை அவரது கண்டுபிடிப்புகள் உலக மக்களால் பயன்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் அவர் 1905-ல் ஐன்ஸ்டீன் எழுதி வெளியிட்ட சிறப்பு சார்பியல் ஆய்வு அறிக்கையின் கையெழுத்துப் பிரதியும், 1915-ல் எழுதி வெளியிட்ட ஜெனரல் ரிலேட்டிவிட்டியை மையப்படுத்திய கட்டுரையின் கையெழுத்து பிரதிகளும் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன.
1928 பிப்ரவரி 3-ம் தேதி நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள இந்த கட்டுரையின் கையெழுத்துப் பிரதிகள் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இம்மாதம் 23-ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட்டது. இதில் ரூ.10.7 கோடி ரூபாய்க்கு ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகள் ஏலம் எடுக்கப்பட்டதாக ஏல நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
300 பேரைக் காணவில்லை... பெட்ரோல் மையத்தில் பயங்கர வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 68 ஆனது!
அதிர்ச்சி.... 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
ரூ.1.70 கோடி ஏமாற்றி விட்டார்... கட்டிடப் பொறியாளர் மீது நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!
வைரலாகும் புகைப்படம்... 'மாமன்னன்' பாணியில் அவமானப்படுத்தினாரா அமைச்சர் பொன்முடி?
அடேயப்பா... பிக் பாஸ் இந்த சீசனில் கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி!