நள்ளிரவில் சீனா, மியான்மர் மக்களை மிரட்டிய நிலநடுக்கம்... அடுத்தடுத்த அதிர்வுகளால் ஆட்டம் கண்ட வீடுகள்!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

சீனா மற்றும் மியான்மர் நாடுகளில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்தனர்.

சீனாவின் ஜிஜாங் நகரில் நேற்று இரவு 9.25 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

சீனாவின் ஆட்சி பகுதிக்குட்பட்ட திபெத்தில் ஷிகாத்சே என்ற இடத்தில் இருந்து 146 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில், அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்படி, மியான்மரில் நேற்றிரவு 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது.

இந்நிலநடுக்கம் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in